விருதுநகரில் பெய்த மழையின் காரணமாக சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், வாகனங்கள் அதில் தத்தளித்தபடி சென்றன.
தமிழ்நாட்டில் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் விருதுநகரிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த மே 3ம் தேதியன்று மாலை 4 மணிக்கு தொடங்கிய மழையானது சுமார் ஒன்றரை மணி நேரம் கொட்டி தீர்த்தது. வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டு சென்ற நிலையில், மாவட்டத்தின் பிற பகுதிகளான சாத்தூர், அருப்புக்கோட்டை, திருவில்லிபுத்தூர் போன்ற பகுதிகளில் பரவலாக மழைப்பொழிவு காணப்பட்டது.
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)

விருதுநகரில் பெய்த கனமழை
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதில் அதிகபட்சமாக சிவகாசியில் 31 மி.மீ மழையும், விருதுநகரில் 27 மி.மீ மழையும், குறைந்தபட்சமாக திருச்சுழியில் 2 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. கடந்த மாதம் முழுவதும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இம்மாத துவக்கத்தில் நல்ல மழை பெய்து வருவதால் வெப்பநிலை குறைந்து குளிர்ச்சி நிலவி வருகிறது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: