காஞ்சிபுரத்தில் அரசு பணி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் துவங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் மத்திய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கான பணியாளர் மத்திய அரசு தேர்வாணையம் (SSC), ரயில்வே தேர்வுக் குழுமம் (RRB), வங்கி பணியாளர் தேர்வுக் குழுமம் (IBPS) உள்ளிட்ட தேர்வுகள் எழுதி வெற்றி பெற தேவையான தகுதிகள் உள்ளன. இலவச பயிற்சியினை வழங்கப்பட உள்ளது.

இதையும் படிங்க : காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்கு நெல்லையில் இலவச பயிற்சி வகுப்பு..

உங்கள் நகரத்திலிருந்து(காஞ்சிபுரம்)

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்

மேற்கூறிய அரசின் மத்திய அரசின் போட்டித் தேர்வுகளை தமிழகம் சார்ந்த போட்டித் தேர்வர்கள் பெருமளவில் பங்குகொண்டு வெற்றி பெறும் நோக்கில்,காஞ்சிபுரம் மாவட்டத்தில், இப்பயிற்சி வகுப்புகள் விரைவில் துவங்கப்பட்டு 3 மாத காலங்களுக்கு நடைபெற உள்ளது.

இப்பயிற்சியானது மேற்கண்ட தேர்வுகளுக்கு சிறந்த முறையில் வழங்க இத்துறையில் நிபுணத்துவம் பெற்ற பயிற்றுநர்களுக்கு பயிற்சி சிறப்பாக வழங்கப்பட உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எனவே, இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது அலுவலக தொலைபேசி எண் 044-27237124 மூலம் தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பயிற்சி வகுப்புகளில் அரசு பணிக்கு தயாராகிவரும் காஞ்சிபுரம் மாவட்ட வேலை தேடும் இளைஞர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்” என தெரிவித்துள்ளார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link