திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழக பதிவாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் ஜி அண்ணாதுரை வெளியிட்ட செய்தி குறிப்பில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் சங்கரன்கோவில் சேரன்மகாதேவி நாகம்பட்டி புளியங்குடி திசையன்விளை பணகுடி ஆகிய இடங்களில் பல்கலைக்கழக கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த ஆறு கல்லூரிகளிலும் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக்செய்க

உங்கள் நகரத்திலிருந்து(திருநெல்வேலி)

திருநெல்வேலி

திருநெல்வேலி

இக்கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் www.msuniv.ac.in எந்த இணையதளத்தில் விவரங்களை அறியலாம். இளம் நிலை படிப்புக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான 10 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். முதுகலை படிப்புக்கு பல்கலைக்கழகத்தின் இளம்நிலை தேர்வு முடிவுகள் வெளியான 10 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.



Source link