மயிலாடுதுறை அருகே குடும்ப சொத்து பிரச்னையில் ஊர் முக்கியஸ்தர்கள் ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்டிஓவிடம் புகார் மனு அளித்தனர்.

மயிலாடுதுறை அருகே திருமங்கலம் மெயின்ரோடு அருகே உள்ள சாலையில் முகம்மதுநாசர் என்பவர் மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். தனது பெயரில் உள்ள வீட்டை தனது குழந்தைகளின் பெயரை எழுதி வைத்துள்ளார்.

இந்நிலையில் அவரது தங்கை ஹனிஸ்பாத்திமா வீட்டை தனக்கு கொடுக்குமாறு பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த சிலருடன் மிரட்டல் விடுப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். ஜமாத்தில் தங்களைக் குறித்து அவதூறு கூறியதால், திருமங்கலம் பள்ளிவாசலுக்குச் செலுத்த வேண்டிய பணத்தை வாங்க மறுத்துவிட்டதாகக் கூறியுள்ளார்.

உங்கள் நகரத்திலிருந்து(மயிலாடுதுறை)

மயிலாடுதுறை

மயிலாடுதுறை

இதையும் படிங்க: கர்நாடக தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

மேலும், சொத்துபிரச்னைக்கு ஊர்முக்கியஸ்தர்கள் சொல்வதுபடி செய்தால்தான் பள்ளிவாசலுக்கு வரிவாங்கிப்போவதில்லை என்று ஊரைவிட்டு ஒதுக்கிவைத்துவிடுவோம் என்று மிரட்டுவதாக புகார் அளித்தார், குடும்பத்தினருடன் கருப்பு துணி கட்டி ஆர்டிஓவிடம் புகார் மனு அளித்தார்.

செய்தியாளர் : கிருஷ்ணகுமார்

முதலில் வெளியிடப்பட்டது:

குறிச்சொற்கள்: உள்ளூர் செய்திகள், மயிலாடுதுறை



Source link