தொழில் நகரான விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நாளொரு புதிய தொழில்கள் வளர்ந்து வரும் சுழலில், சிலர் தன்னிடம் இருக்கும் திறனை மூலதனமாக கொண்டு தொழில் தொடங்கி வருகின்றனர். அந்த வகையில் சாக்பீஸ் கொண்டு கலைப்பொருட்கள் செய்வதையே பகுதி நேர தொழிலாக மாற்றியுள்ளார் சிவகாசியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவரான விண்ணப்பித்ரீதர்.
சிறுவயதில் வகுப்பறையில் சாக்பீஸ் கொண்டு விளையாடும் போது அதுலேயே சின்ன பொருட்கள் செய்து பார்த்த போது அது மிகவும் அழகாக இருந்ததால், அதை தொடர்ந்து தற்போது சாக்பீஸ் கொண்டு திருமணங்களுக்கு பரிசாக கொடுக்கும் கலைப்பொருட்கள் மற்றும் குட்டி சேர் , குட்டி சோபா போன்ற மினியேச்சர் பொருட்கள் வருகின்றன.

சாக்பீஸில் மினியேச்சர் பொருட்கள்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
கலைப்பொருட்கள் செய்வதோடு மட்டும் இல்லாமல் அதையே தொழிலாக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ள மாணவர், தற்போது சிவகாசியாபுரம் பகுதியில் உள்ள தனது இல்லத்தையே அலுவலகமாக மாற்றி தேடி வருபவர்களுக்கு அவர் விரும்பிய வடிவில் கலைப்பொருட்கள் செய்து கொடுக்க நேர வருமானம் ஈட்டி வருகிறார்.
மாணவர் இயக்கிதரின் செயல்களை பார்த்த சில நண்பர்கள் தற்போது அவரிடம் வந்து சாகபீஸில் கலைப்பொருட்கள் செய்ய பயிற்சி பெற்று வருகின்றனர். தன்னுடைய திறமை தனக்கு மட்டும் இல்லாமல் மற்றவர்களுக்கும் பயன்படட்டும் என்ற நல்லெண்ணம் கொண்ட இந்த மாணவரின் செயல் நிச்சயம் பாராட்டத்தக்கது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மாணவர் அனுப்பிரீதரை வாழ்ந்த விரும்புவோர் 86680 01014 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: