தூத்துக்குடி வ உ சி துறைமுகத்தில் வேலை என்ற பெயரில் போலி நிறுவனங்கள் முகவர்கள் கூறுவதை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என தூத்துக்குடி வ உ சி துறைமுக ஆணையம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியில் உள்ள வ.உ.சி துறைமுக ஆணையத்தில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக சில தனியார் ஏஜென்சிகள் மற்றும் முகவர்கள் பொதுமக்களிடம் ஏமாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து வ.உ.சி துறைமுக ஆணையம் இன்று பொது மக்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் வ உ சிதம்பரனார் துறைமுகம் ஆணையம் மத்திய அரசின் துறைமுகங்கள் கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அமைப்பாகும்.
உங்கள் நகரத்திலிருந்து(தூத்துக்குடி)
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் நிரந்தர பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் காலி பணியிடம் நிரப்பும் நடவடிக்கை மத்திய அரசின் துறைமுக ஆட்சேர்ப்பு விதிகளை பின்பற்றி அரசின் கொள்கைப்படி செய்தித்தாள் விளம்பரம் மற்றும் இணையதள துறைமுகம் வழியாக அறிவிப்பு செய்யப்படும் வெளிப்படையான முறையில் மட்டுமே நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள் துறைமுகத்துடன் எந்த தொடர்பும் இல்லாத மோசடி நிறுவனங்கள் ஏஜென்சிகள் முகவர்களை நம்பி ஏமாற வேண்டாம். மேலும் பொதுமக்கள் போலி நபர்களை நம்பி எந்த பதிவையும் செய்ய வேண்டாம் என தூத்துக்குடி துறைமுக ஆணையம் அறிவித்துள்ளது.
செய்தியாளர்- பி.முரளி கணேஷ்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: