அதிமுக கொடியை பயன்படுத்தும் விவகாரம் தொடர்பாக சேலத்தில் ஓபிஎஸ் – ஐபிஎஸ் ஆதரவாளர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

சேலம் மாநகர் பேலஸ் தியேட்டர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சார்பில் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதற்காக இந்த கூட்டம் நடைபெறும் மண்டபத்தின் முன்பாக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் சாலையில் இருபுறங்களிலும் அதிமுக கொடி கம்பங்களை நடும் பணியும் செய்தது.

இதையும் படிங்க: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் பின்தங்கிய நிலையில் வட மாவட்டங்கள்… வெள்ளை அறிக்கை வெளியிட ராமதாஸ் வலியுறுத்தல்…

உங்கள் நகரத்திலிருந்து(சேலம்)

இதனை அறிந்த அதிமுக ஐபிஎஸ் அணியினர் உடனடியாக சுப்பராயன் சாலையில் கொடிக்கம்பங்களை நடும் பகுதிக்கு சென்று, அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது என்று கூறி அகற்றினர். இதனை அடுத்து ஓபிஎஸ் ஐபிஎஸ் ஆதரவாளர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இது குறித்த தகவல் அறிந்த சேலம் டவுன் போலீசார் உடனடியாக இரு தரப்பினரையும் விலக்கினர். காவல்துறையினரின் தலையீட்டால் அங்கு நிகழவிருந்த மோதல் தவிர்க்கப்பட்டது . பின்னர் இரு தரப்பினரும் சேலம் மாநகர காவல் உதவி ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் – திருமலை தமிழ்மணி

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link