தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. மாணவர்கள் 94.66 சதவீதம் பேரும், மாணவர்கள் 88.16 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களில் 87.45 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநிலத்திலேயே 97.67 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்தைப் பெற்றது.
அதே போன்று, ஓட்டு மொத்த தேர்ச்சி விகிதத்தில் சிவகங்கை மாவட்டம் இரண்டாம் இடமும், அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றியை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, முதன்மை கல்வி அலுவலர், ஆசிரியர்கள் ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடினர்.
உங்கள் நகரத்திலிருந்து(சிவகங்கை)
இந்த வெற்றி குறித்து மாவட்ட ஆட்சியர் பேசுகையில், ‘மன உளைச்சலுக்கு ஆளாகாமல் மாணவர்களை தயார் செய்து படிக்க வைத்தது முக்கிய காரணம் என்று தெரிவித்தார். குறிப்பாக மாணவர்கள் எந்த பாடத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. எதில் பிரச்சனை இருக்கிறது என கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது தற்போது பயனளித்துள்ளதாக தெரிவித்தார்.
இதையும் வாசிக்க: 10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள்: 91.39% தேர்ச்சி… 78,706 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை.
முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் கூறும்பொழுது, ‘கற்றல் விளைவுகள் தொடர்பான பயிற்சிகள் ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டது. பொதுத்தேர்வில் பாட வாரியாக தேர்ச்சி பெறுவது எப்படி என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. ஒவ்வொரு மாணவரும் சிறப்புத் திறனைக் கொண்டிருப்பார்கள் என்பதை ஆசிரியர்கள் நன்கு அறிந்திருந்தனர்” என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: