நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சூறாவளி காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்தது. இதனால், 2 மின்கம்பங்கள் மற்றும் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள போக்குவரத்து மின்கலன் விழுந்தன.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான புதுப்பாளையம், பட்டணம், அத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்தது. இந்த சூறாவளி காற்று வீசியதில் ராசிபுரம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள போக்குவரத்து மின்கலன் மற்றும் ராசிபுரம் முதல் புதுப்பாளையம் செல்லும் வழியில் 2 மின்சார கம்பங்கள் சாலையில் சாய்ந்து விபத்துக்குள்ளானது.

ராசிபுரத்தில் சூறைக்காற்றுடன் பெய்த மழை
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
ராசிபுரம் ட. புதுப்பாளையம் செல்லும் சாலையில் மின்கம்பம் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக மின்கம்பம் சாயும் நேரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இவ்வாறு, மின் கம்பங்கள் சாய்ந்த நிலையில் ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில் 2 மணி நேரத்திற்கு மேல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: