நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் சிக்கிய போது அனைத்து வேலைகளையும் இழுத்துப்போட்டுச் செய்தவர் பூஜா தத்லானி. கடந்த 11 ஆண்டுகளாக ஷாருக்கானின் பி.ஏ.வாக இருக்கும் பூஜை, கிட்டத்தட்ட ஷாருக்கானின் குடும்ப உறுப்பினராகவே வாழ்ந்து வருகிறார். ஆர்யன் கான் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் பிடிபட்ட போது அவரை விடுவிக்க பூஜாதான் முன்னணியில் நின்று பல முயற்சிகளை மேற்கொண்டார்.