ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் நகராட்சிக்கு உட்பட்ட சங்குமால் கடற்கரையில் நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இதன் வழியாக ஓலைக்குடா கிராமம் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்ளன.

இந்த பகுதியில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக மின்விளக்குகள் அனைத்தும் பழுதாகி ஒருகிலோ மீட்டர் தூரம் வரை மின்கம்பங்கள் மட்டுமே உள்ளன. இதனால் அப்பகுதியானது இருந்த இடமாக உள்ளது.

இதனால் மீனவர்களின் மீன்பிடி வலைகள், டீசல்கள் திருடப்படுவது, மேலும், மர்மநபர்கள் மது அருந்திவிட்டு வலைகள் மற்றும் படகுகளை எரிப்பது போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)

ராமநாதபுரம்

ராமநாதபுரம்

மின்விளக்கு இல்லாத சங்குமால் கடற்கரை

ஓலைக்குடா கிராமமானது இந்தப் பகுதியில் இருந்த 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதன் வழியாக தான் அந்த கிராமத்துக்கு மக்கள் செல்கின்றனர். வேலைக்குச் சென்று விட்டு இரவில் திரும்பும்போது மிகுந்த பயத்துடன் செல்லும் நிலை உள்ளது. பள்ளி மாணவிகளும் அச்சத்துடன் அந்த பகுதியை கடந்து செல்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

சங்குமால் கடற்கரை வழியாக கடத்தல் நடைபெறுவதாகவும், மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் தான் இரவில் கடத்தலுக்கு துணையாக இருக்கும் என்று மின்விளக்குகளை பராமரிக்காமல், இருள் சூழ்ந்த இடமாக நகராட்சி நிர்வாகம் வைத்துள்ளதா என பொதுமக்கள் மீனவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link