திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள லிங்கேஸ்வரர் கோயிலில் இன்று அதிகாலை அர்ச்சகர்கள் திறந்த போது, ​​வெளி பிரகாரத்தில் இருந்த 63 நாயன்மார்கள் சிலைகளில் உடைப்புகள் களையப்பட்டன, உண்டியல், சுற்றுச்சுவரில் இருந்த சிலைகள் சேதப்படுத்தப்பட்டன.

இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துணை கண்காணிப்பாளர் பவுல்ராஜ் மற்றும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து கைரேகை சோதனையும் செய்யப்பட்டது.

உங்கள் நகரத்திலிருந்து(திருப்பூர்)

திருப்பூர்

திருப்பூர்

அப்போது, ​​கோயில் ராஜகோபுரத்தின் மேல் பகுதியில் பதுங்கியிருந்த ஒருவர் பிடிபட்டார். அவர் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் என்பதும், கோயிலில் இருந்த வெண்கல வேல் உள்ளிட்ட பொருட்களை திருடி வைத்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link