ஈரோட்டில் போக்குவரத்து நிறைந்த சாலையில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதி போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியாகும். இங்கு வழக்கம்போல் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் மதுபோதையில் தனது வாகனத்தை நிறுத்தி திடீரென ரகளையில் ஈடுபட்டார்.
இதனை கண்ட போலீசார் அப்பெண்ணை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திடீரென போலீசாரிடம் இருந்து தப்பி சாலையில் ஓடி எஸ்பி அலுவலக வாயிலில் பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காக காத்திருந்த பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டார். மேலும் அந்த வழியாக வந்த பேருந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
உங்கள் நகரத்திலிருந்து(ஈரோடு)
இளம்பெண்ணின் செயலால் பொறுமையிழந்த போலீசார் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு, பொதுமக்கள் உதவியுடன் குண்டு கட்டாக தூக்கி ஆட்டோவில் ஏற்றி காவல்நிலையம் அழைத்து சென்றனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த அங்காய் என்பதும் மதுபோதையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர்: பாபு, ஈரோடு.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: