திருநெல்வேலி மாவட்டம் வாகைகுளம் பன்னிருபிடி அய்யன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் ஜம்மு காஷ்மீரில் நடந்த தேசிய அளவிலான மல்யுத்த போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று சாதனை படைத்தனர்.
ஜம்மு காஷ்மீரில் நடந்த தேசிய அளவிலான மல்யுத்த போட்டியில் பங்கேற்ற தமிழக இளையோர் விளையாட்டு மேம்பாட்டு கழக அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. யூத் ஸ்போர்ட்ஸ் புரொமோஷன் அசோசியேசன் ஆப் இந்தியா நடத்திய இளையோருக்கான மூன்றாவது தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்மு பல்கலைக்கழகத்தில் நடந்தது.
இதில் தமிழக இளையோர் விளையாட்டு மேம்பாட்டு கழக அணி ஆனது தடகளம் ,வாலிபால் , கபடி ,சிலம்பம், மல்யுத்தம் ஆகிய போட்டிகளில் கலந்துகொண்டு ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது. குறிப்பாக நெல்லை மாவட்டம் வாகைகுளம் அருள்மிகு பன்னிருபிடி அய்யன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் மல்யுத்த போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று சாதனை படைத்தனர்.
உங்கள் நகரத்திலிருந்து(திருநெல்வேலி)

சாதனை படைத்த நெல்லை மாணவர்கள்
இதில் தமிழக அணியின் பயிற்சியாளராக கோபிநாத், காஞ்சனா, சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். ஜம்மு காஷ்மீரில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற இந்த மாணவர்கள் வரும் ஜூலை மாதம் நேபாளத்தில் நடைபெற உள்ள சர்வதேச இந்த நேபாள் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க தேர்வாகியுள்ளனர் என்று ஒய்.எஸ்.பி.ஏ தமிழக இளையோர் மேம்பாட்டு கழக மாநில செயலாளர் நாகராஜ் கூறினார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: