நெல்லை மாவட்டம் அப்பர் கோதையாறு வனப்பகுதியில் விடப்பட்ட அரிசிக் கொம்பன் யானை அதே பகுதியில் நடமாடி வருவதாக வனத்துறையினர் பதிவு செய்தனர்.
தேனி மாவட்டத்தில் சுற்றித் திரிந்த அரிசிக்கொம்பன் யானையை வனத்துறையினர் திங்கட்கிழமை அதிகாலை மயக்க ஊசி செலுத்தி கும்கி யானைகள் உதவியுடன் பிடித்தனர். நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு வனப்பகுதிக்கு லாரியில் கொண்டு செல்லப்பட்ட அரிசிக் கொம்பன், அங்கிருந்து 75 கிலோ மீட்டர் தொலைவில் அப்பர் கோதையாறு முத்துக்குளி வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பிடிக்கும் பணியின் போது தும்பிக்கை மற்றும் முதுகுப் பகுதியில் அரிசிக்கொம்பன் யானைக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், யானை நலமுடன் இருப்பதாக சிகிச்சை அளித்த வனத்துறை மருத்துவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, மயக்க நிலையில் இருந்து யானை தெளிந்து விட்டதாக, வனத்துறைக்கு உதவும் பணியில் ஈடுபட்ட ஜே.சி.பி. ஓட்டுநர் குறிப்பிட்டார்.
உங்கள் நகரத்திலிருந்து(திருநெல்வேலி)
இதையும் படிங்க | சோலி முடிஞ்சிச்சி..! அரிசிக்கொம்பனை அழைத்து செல்லும்போது அவிழ்ந்த கயிறு..!
இதனிடையே, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனத்துறை ஊழியர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் யானையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: