திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டத்தில் உள்ளது குமரிக்கல் பாளையம். இந்த ஊரில் வீரன் ஒருவருக்காக நடத்தப்பட்ட உயரமான நடுகல் ஒன்று கம்பீரமாய் காட்சியளிக்கிறது. திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் இருந்து 15 கி.மீ தொலைவில் இந்த குமரிக்கல் பாளையம் உள்ளது.
அந்தக் காலத்தில், ஒரு இனத்துக்காகவோ அல்லது ஒரு குழுவுக்காகவோ தங்களின் உயிரை தியாகம் செய்யும் வீரனுக்கு நடுகல் வைத்து வழிபடுவது வழக்கம். போரில் வீரமரணம் அடையும் தளபதிகளுக்கும் கூட இப்படி நடுகல் வைத்து கவுரவிக்கும் வழக்கம் மன்னர் காலத்தில் இருந்தது.

போர் வீரனை குலதெய்வமாக வழிபடும் திருப்பூர் மக்கள்
உங்கள் நகரத்திலிருந்து(திருப்பூர்)
இந்த நடுகல்லும் அப்படியொரு வீரனுக்காக வைக்கப்பட்டதுதான் என்கின்றனர் இப்பகுதி மக்கள். ஏறக்குறைய 2,300 ஆண்டுகள் தொன்மையானதாக கருதப்படும் இந்த நடுகல்லின் தற்போதைய உயரம் 30 அடி, அகலம் 6 அடியாக கூறப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நடுகல்லின் தலைப் பகுதியிலிருந்து சுமார் 4 அடி உயர நுணிக்கல் உடைந்து கீழே விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
இதன் எடை சுமார் 10 டன் இருக்கலாம் என தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வரலாற்று எச்சமாக திகழும் இந்த நடுகல்லை திருப்பூர் சுற்றுப்புற மக்கள் குலதெய்வமாகவே வழிபட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் திருப்பூர், ஈரோடு சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த மக்கள் இந்த நடுகல்லை குலதெய்வமாக பாவித்து வழிபாடு நடத்தி வருகின்றனர். வருடத்தில் ஒரு நாள் மட்டும் ஊர் கூடி இங்கு வந்து வழிபடுகின்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.