காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 51 வார்டுகளில் 400க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மாதம்தோறும் ஊதியமாக ரூ.9,300 வழங்கப்படுகிறது.
காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது புதிய தனியார் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்துள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு இன்று காலை பணியை புறக்கணித்து மாநகராட்சி அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்
இதன் காரணமாக மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள முக்கிய சாலையான இந்திரா காந்தி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தூய்மை பணியாளர்கள் சாலை மறியல் குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாநகராட்சி ஆணையர் கண்ணன் மற்றும் அதிகாரிகள் தூய்மை பணியாளர்களுடன் பேச்சு வார்த்தை நடந்தது. பின்னர் அவர்களை சமாதானப்படுத்தியதை தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.