திருப்பூர் மாவட்ட முன்னாள் முதல்வர் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப்படிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப நடைபெறுவது முகாம்கள் இரண்டு கட்டங்களாக உள்ளன. முதல் கட்ட விண்ணப்பப்படிவு முகாம் 24.07.2023 முதல் 04.08.2023 வரை நடைபெறும். இரண்டாம் கட்டமுகாம் 05.08.2023 முதல் 16.08.2023 வரை நடைபெறும்.
நியாய விலைக்கடைப் பணியாளர் ஒவ்வொரு நியாய விலைக்கடைப் பகுதியில் முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரத்தைக் குறிப்பிட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவை நேரடியாக வீட்டில் வழங்குவார்கள். டோக்கன் வழங்கும் பணி முகாம் நடைபெறும் நாளுக்கு நான்கு நாட்களுக்கு முன்பாகத் தொடங்கும்.
பொதுமக்கள் இந்த விண்ணப்பங்களைப் பெறுவதற்காக நியாய விலைக்கடைக்கு வரத்தேவையில்லை. குடும்ப அட்டை இருக்கும் நியாய விலைக்கடைப் பகுதியில் நடைபெறும் முகாமில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
முதல் மற்றும் இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் பெறப்படும் கிராமங்கள் மற்றும் நகரப்பகுதிகளின் விவரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்ட குடும்பத்தில் உள்ள குடும்பத்தலைவி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நேரடியாக விண்ணப்பித்தல் முகாம் நடைபெறும் இடத்திற்கு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் எடுத்துவர வேண்டும்.
விண்ணப்பம் பதிவு செய்யும்போது சரிபார்ப்புக்கான ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண இரசீது, வங்கி பாஸ்புத்தகம் ஆகியவற்றை எடுத்து வரவேண்டும். விண்ணப்பத்துடன் எந்த ஆவணங்களையும் நகல் எடுத்து இணைக்கத் தேவையில்லை. மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பம் செய்ய, வருவாய்த்துறையில் வருமானச்சான்று, நில ஆவணங்கள் போன்ற எந்தச் சான்றுகளையும் விண்ணப்பித்துப் பெறத்தேவையில்லை. விண்ணப்பப்படிவ முகாமில் ஒரே நேரத்தில் பலர் கூட்டமாகக் கூடுவதை தவிர்க்க வேண்டும். விண்ணப்பம் அளிக்கப்படும் அனைத்து நபர்களின் விண்ணப்பங்களும் பதிவு செய்யப்படும். விண்ணப்பபதிவு ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து முகாம் நாட்களிலும், காலை 9.30 மணிமுதல் 1 மணிவரையும், பிற்பகல் 2 மணிமுதல் 5:30 மணிவரையும் நடைபெறும். முகாம் நடைபெறும் குடியிருப்புகள், தெருக்கள், வார்டு மற்றும் அவற்றுக்கான நாட்கள் குறித்த விவரங்கள் நியாய விலைக்கடைகளில் தகவல் பலகையாக வைக்கப்படும்.
விண்ணப்பப்படிவ முகாமிற்கு வருகை புரியும் விண்ணப்பதாரர்களின் ஆதார் எண் பதியப்பட்டு, அவர்களின் விரல் ரேகை பயோமெட்ரிக் குருவி மூலம் சரிபார்க்கப்படும். பயனாளிகளின் விரல் ரேகைப்பதிவு சரியாக அமையவில்லை எனில், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி வழியாக ஒருமுறை கடவுச்சொல் (OTP) பெறப்படும். விண்ணப்பதாரரின் ஆதார் அட்டையுடன் தொலைபேசி இணைக்கப்பட்டு இருந்தால், அந்த கைபேசியை முகாமிற்கு எடுத்துச் செல்வது விண்ணப்பப்படிவத்தை எளிமைப்படுத்தும்.
குடும்பத்தலைவிகளுக்கான கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பயன்பெறத் தகுதி பெற்ற குடும்பங்களில், 21 வயது நிரம்பிய பெண் ஒருவர் விண்ணப்பிக்கலாம். அதாவது, செப்டம்பர் 15, 2002 தேதிக்கு முன்னர் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தங்கள் குடும்ப அட்டை இருக்கும் நியாய விலைக்கடை அமைந்திருக்கும் விண்ணப்பப்படிவ முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்.
குடும்ப அட்டையில் பெயர் இடம் பெற்றவர்கள் அனைவரும் ஒரு குடும்பமாகக் கருதப்படுவர். ஒவ்வொரு தகுதி வாய்ந்த குடும்பத்திலும் உள்ள குடும்பத்தலைவி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம். குடும்ப அட்டையில் குடும்பத்தலைவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ள பெண் குடும்பத் தலைவியாகக் கருதப்படுவார். குடும்ப அட்டையில் ஆண் குடும்பத்தலைவராகக் குறிப்பிடப்பட்டிருந்தால், அந்தக் குடும்பத்தலைவரின் மனைவி குடும்பத்தலைவியாகக் கருதப்படுவார். குடும்ப அட்டையில் ஆண் குடும்பத்தலைவரின் மனைவியின் பெயர் ஏதேனும் காரணத்தினால் இல்லாத பட்சத்தில், குடும்பத்தில் உள்ள பெண்களில் ஒருவர் குடும்பத்தலைவியாகக் கருதப்படுவார்.
ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற ஒருநபரைக் குடும்ப உறுப்பினர்கள் தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம். திருமணமாகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்களும் குடும்பத் தலைவர்களாகக் கருதப்படுவர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறிப்பிடப்பட்டுள்ள நாளன்று விண்ணப்பதிவு முகாமிற்கு விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களைச் சரிபார்ப்புக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள கீழ்கண்ட அலுவலகக் கட்டுப்பாட்டு அறை எண்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
S.no | மண்டல பெயர் | எண் |
1. | திருப்பூர் வடக்கு | 0421 -2200553 |
2. | திருப்பூர் தெற்கு | 0421 2250192 |
3. | அவிநாசி | 04296 -273237 |
4. | பல்லடம் | 04255- 253113 |
5. | ஊத்துக்குளி | 04294- 260360 |
6. | தாராபுரம் | 04258- 220399 |
7. | காங்கயம் | 04257-230689 |
8. | மடத்துக்குளம் | 04252- 252588 |
9. | காங்கயம் | 04252- 223857 |
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.