என்.எல்.சி நிர்வாகத்துக்கும், தொழிற்சங்கங்களுக்கு இடையிலான பிரச்னை தொடர்பாக தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தடைவிதிக்க வலியுறுத்தி, என்.எல்.சி. தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் போராட்டம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு,  வீடியோ ஆதாரம் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, என்எல்சி நிறுவனம் மற்றும் அங்கு பணிக்கு செல்லும் ஊழியர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் கடலூர் மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக ஆகஸ்ட் 3-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்

என்எல்சி பணியாளர்களுக்கு என்ன தேவையோ அதை செய்து கொடுத்து அவர்களை மகிழ்ச்சியுடன் வைத்திருங்கள் என்றும், அதற்காக பணத்தை செலவிடுங்கள் என்றும் அறிவுறுத்தினார்.

இதனிடையே என்எல்சி நிறுவனத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் கால்வாய் அமைக்கும் பணிகளை எதிர்ப்பு கிளம்பியது குறித்து நீதிபதி எம்.தண்டபாணிகேள்வி எழுப்பினார். என்எல்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நிலத்தின் மதிப்பை விட மூன்று மடங்கு அதிகமாக இழப்பீடு கொடுக்கப்பட்டுள்ளதாகவும், 20 ஆண்டுகளுக்கு முன்பாக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு, பத்தாண்டுகளுக்கு முன்பாக இழப்பீடு தொகை கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது நிலத்தை எடுக்க உரிமையாளர்கள் எதிர்த்து வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி தண்டபாணி, 20 ஆண்டுகளாக நிலத்தை சுவாதீனம் எடுக்காமல் இருந்த நிலையில்,  பயிரை அறுவடை செய்யும் வரை இரண்டு மாதங்கள் காத்திருக்க முடியாதா என கேள்வி எழுப்பினார்.



Source link