நாகை அருகே காதல் விவகாரத்தில் 10 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்

அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்துள்ள  கொத்தங்குடி  ஊராட்சி அய்யூர் பகுதியை சேர்ந்தவர் வீரையன். இவருடைய 5வது

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம்

மகள் ஷாலினி, கொத்தங்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த

ராஜேந்திரன் மகன் சின்னதுரை என்பவரும் ஷாலினியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷாலினியை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு சின்னதுரை சென்றுள்ளார். அப்போது ஷாலினியின்

அக்கா உன்னிடம் பேச கூடாது, பார்க்க கூடாது என கூறியுள்ளோம் என சின்னதுரையை கண்டித்துள்ளார்.

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், சின்னதுரை நந்தினியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார்.  இது குறித்து நந்தினி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி ஷாலினியை காணவில்லை என பெற்றோரும், உறவினர்களும் ஊர் முழுக்க தேடியுள்ளனர்.

இரவு வீரையன் வீட்டிற்கு பின்புறம் சிறுநீர் கழிக்க சென்றபோது ஷாலினி மரத்தில் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்து வந்த அக்கம் பக்கத்தினர், மாணவியின் உடலை மீட்டு திருக்குவளை காவல் நிலையம் முன்பு

உடலை வைத்து நியாயம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற டி.எஸ்.பி பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸார் அங்கு கூடியிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்‌. பிரேத பரிசோதனைக்கு பிறகு உண்மையை கண்டறித்து உரிய நடவடைக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர் மாணவியின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக

நாகை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க : குழந்தை இல்லாததால் கணவர் டார்ச்சர்.. விபரீத முடிவு எடுத்த இளம்பெண்.. அதிர்ச்சியில் உயிரிழந்த பாட்டி

பிரேத பரிசோதனையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்ததை அடுத்து தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி ஷாலினியின் அக்கா நந்தினி அளித்த புகாரின் அடிப்படையில் மாணவியின் காதலன் சின்னதுரை, அவரது சகோதரர்  கண்ணன், தந்தை ராஜேந்திரன், தாய் பாப்பாயி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்த நிலையில், தலைமறைவாக உள்ள பாப்பாயியை தேடி வருகின்றனர்.

தற்கொலை தீர்வல்ல – மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.



Source link