கடலூர் மாவட்டத்தில் கிராமப் பகுதிகளுக்கு இரவில் நிறுத்தப்பட்டிருந்த போக்குவரத்து சேவை, காலை மீண்டும் தொடங்கியது.
சேத்தியாத்தோப்பு அருகே உள்ள மேல்வளையமாதேவி கிராமத்தில் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் கால்வாய் அமைக்கும் பணியில் என்எல்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பயிர்களை அழித்து நடக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த புதன்கிழமை இரவு அரசு பேருந்துகள் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
இதன்காரணமாக கடலூர் மத்திய பேருந்து நிலையத்தில் கிராமப்பகுதிகளுக்கு கடந்த 4 நாட்களாக , இரவு நேர பேருந்து ரத்து செய்யப்பட்டிருந்தது. நேற்றும் மாலை 6 மணி முதல் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. வெளியூர் செல்லும் அரசு பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டன. இரவு நேரத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் காலை 6 மணி முதல் வழக்கம் போல் பேருந்து சேவை தொடங்கியுள்ளது. இதனிடையே, என்எல்சி-க்கு எதிராகவும், அன்புமணி ராமதாஸ் கைதுக்கு எதிராகவும் நடைபெற்ற போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
நெய்வேலியில் வன்முறையில் ஈடுபட்ட 26 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், 2 சிறார்கள் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று, பேருந்துகள் மீது நடத்தப்பட்ட கல்வீச்சு தாக்குதல் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.