கூவம் நதியைப் போன்று, தாமிரபரணி, வைகை நதிகளையும் திராவிட கட்சிகள் சாக்கடையாக மாற்றி விட்டதாக பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார்.

நெல்லை பாளையங்கோட்டையில் பாமக 2.0 செயல்திட்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அன்புமணி ராமதாஸ், வார்த்தைக்கு வார்த்தை திராவிட மாடல் எனக்கூறும் திமுக அரசு, தாமிரபரணியை காக்க என்ன செய்துள்ளது என கேள்வி எழுப்பினார்.

‘ isDesktop=”true” id=”1087409″ youtubeid=”a7MTvqwZJY0″ category=”tirunelveli”>

திருநெல்வேலி

திருநெல்வேலி

ஆட்சி செய்த அரசுகள் வேளாண் கட்டமைப்புகளை உருவாக்கி வந்திருக்க வேண்டும். அதையெல்லாம் செய்யாததால் தக்காளி உள்ளிட்ட விவசாய பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.

இரு திராவிட கட்சிகளுமே, பாமகவுக்கு சாதிய கட்சி என்ற அடையாளத்தை பூசி விட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். மேலும், திமுக, அதிமுகவுக்கு மாறி மாறி வாய்ப்பளித்த மக்கள், பாமகவுக்கு வாய்ப்பளித்தால் தமிழ்நாட்டை மாற்றிக் காட்டுவோம் என்றும் அன்புமணி தெரிவித்தார்.

இதையும் படிங்க : என்.எல்.சி முற்றுகை போராட்டத்தில் கைதான அன்புமணி ராமதாஸ் விடுவிப்பு..

தமிழகத்தை தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் பின் தங்கிய மாநிலங்களுடன் ஒப்பிட்டு பார்க்கிறார்கள் என்றும் தமிழக மக்கள்  எங்களுக்கு ஒரு வாய்ப்பளித்தால் முன்னேறிய

தமிழகத்தை உருவாக்கி சிங்கப்பூருடன் போட்டியிட செய்வோம் எனவும் அவர் குறிபிட்டு பேசினார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.



Source link