ஒரே நாளில் 4 லட்ச ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்த விவசாயி. இனிமேலாவது விவசாயிகளுக்கு பெண் கொடுக்க முன் வருவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.  விளைச்சல் குறைவு காரணமாக தக்காளியின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ரூ..80 முதல் ரூ. 150 வரையில் தக்காளி விற்பனையாகி வருகிறது.

தக்காளி பொதுமக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தினாலும் விவசாயிகள் வாழ்க்கையில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தக்காளியை அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யும் விவசாயிகள் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளார்கள். தமிழ்நாட்டிலும் தக்காளி வியாபார லட்சாதிபதிகள் உருவெடுத்துள்ளார்கள். திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஜோதியம்பட்டியை சேர்ந்த விவசாயி வெங்கடேஷ், தனக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் கடந்த 5 ஆண்டுகளாக தக்காளி விவசாயம் செய்து வருகிறார்.

இதையும் படிங்க – ஒரு கிலோ தக்காளி ரூ.190 ஆக உயர்வு – பொதுமக்கள் கடும் அதிர்ச்சி

இவர் நாள்தோறும் அறுவடை செய்யும் தக்காளிகளை தென்னம்பாளையம் காய்கறி சந்தையில் விற்பனை செய்து வருகிறார். இன்று ஒரே நாளில் 260 பெட்டியில் 3 ஆயிரத்து 900 கிலோ தக்காளிகளை விற்பனை செய்துள்ளார்.

இதன் மூலம் ஒரு பெட்டிக்கு ஆயிரத்து 550 ரூபாய் வீதம் 4 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் இதுவே தனது அதிகபட்ச வருவாய் என்று தெரிவித்துள்ள வெங்கடேஷ், இனியாவது விவசாயிகளுக்கு பெண் கொடுப்பார்கள் என்று கூறியுள்ளார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.



Source link