நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பருவ மழையின் தாக்கமும் கடும் பனிமூட்டமும் அதிகரித்து காணப்பட்டு வந்தது. இதனால் வேலைக்கு செல்லும் உள்ளூர் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் என பலரும் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர் .

இது மட்டுமல்லாமல் அதிக அளவு மழை பெய்ததால் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகளின் வரத்து குறைவாகவே இருந்து வந்தது. சமவெளி பகுதிகளில் இருந்து உதகைக்கு சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகள் இந்த வானிலையை அனுபவித்து மகிழ்ந்து வந்தாலும் அதிக அளவு மழை பெய்த சமயங்களில் படகு சவாரி ரத்து செய்யப்பட்டது.

இதனை அடுத்து கடந்த 3 நாட்களாக இருந்த மழையின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பகல் நேரங்களில் உதகை சுற்று வட்டார பகுதிகளில் மிதமான வானிலை நிலவி மாலை நேரங்களில் லேசான சாரல் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.



Source link