நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் முறையான குப்பைத்தொட்டி வசதி இல்லாததால் சாலை ஓரங்களில் குப்பைகள் ஏறியப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் இங்கு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடுகள் குறைந்து காணப்படுகிறது. இருப்பினும் ஒரு சில பகுதிகளில் தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு இருந்து வருகிறது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் குப்பைகளை அகற்ற மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனி தனியாக தரம் பிரித்து குப்பை வண்டிகளில் வழங்கப்படுகிறது.

இதனிடையே குப்பை வண்டி வரும் நேரம் தெரியாமலும் முறையான குப்பை தொட்டி வசதி இல்லாததாலும் அப்பகுதி பொது மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். ஒரு சில பகுதிகளில் குப்பைத் தொட்டிகள் இருந்தும் அவை முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்றும், அதனால் குப்பைகள் சாலையில் வீசப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். சாலைகளில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளோடு உள்ள குப்பைகளை கால்நடைகள் உண்ணும் நிலையும் ஏற்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மழையால் பாதித்த வார இறுதி நாட்கள்… ஊட்டியின் தற்போதைய கிளைமேட் எப்படி இருக்கு ?

எனவே நகராட்சி நிர்வாகம் குடியிருப்புகள் மற்றும் கடைகளில் உள்ள குப்பைகளை முறையாக பெற்றுச் செல்ல வேண்டும் என்றும் சாலை ஓரங்களில் உள்ள குப்பை தொட்டிகளை முறையாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.



Source link