தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் கிராமப்புற மகளிரை ஊக்குவிக்கும் விதமாக சுயஉதவி குழுவிலுள்ள பெண்கள் சுயமாக தொழில் தொடங்கி பயன்பெற பல்வேறு நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சியர் தலைமையாகக் கொண்டு மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மன்னார்குடி, வலங்கைமான், நீடாமங்கலம் மற்றும் முத்துப்பேட்டை ஆகிய வட்டாரங்களில் 174 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஊராட்சிகளிலும் உள்ள பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக கடந்த 24.06.2023 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு கடன் உதவியாக நுண் நிறுவன கடன் நிதி வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார். அதனடிப்படையில், திருவாரூர் மாவட்டத்தில் 21 மகளிர் பயனாளிகளுக்கு சுய தொழில் தொடங்க ரூ.10 லட்சத்து 83 ஆயிரம் மதிப்பிலான சிறப்பு கடனுதவி வழங்கினார்.
தொடர்ந்து, திருவாரூர் விடியல் ஆடு வளர்ப்பு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு பிணை வைப்பு மானிய நிதியாக ரூ.10 லட்சத்திற்கான காசோலையும் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ வழங்கினர். மேலும் இந்நிகழ்வில் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர்,திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்),பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம்,முன்னோடி வங்கி மேலாளர் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட் செயல் அலுவலர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.