சிவகங்கை
யில் மாணவர்களிடம் பாகுபாடு காட்டியதாகவும், ஜாதிய பிரச்னையை தூண்டியதாகவும் எழுந்த புகாரில் 2 பேராசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் பொருளியல் துறை தலைவர் கிருஷ்ணனுக்கும், அவருக்கு கீழ் பணிபுரியும் உதவி பேராசிரியர் சுப்புராமனுக்கும் இடையே பிரச்னை இருந்துள்ளது. சுப்புராமன் வழிகாட்டுதலுடன் ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு துறைத் தலைவர் கிருஷ்ணன் கையெழுத்திட மறுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவருக்கும் வகுப்பறையிலேயே நேரடியாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கிருஷ்ணன், தனது சமூகத்தினரைக் கொண்ட வாட்ஸ் ஆப் குழுவில் தனக்கு ஆதரவு கேட்டுள்ளார். இதுதொடர்பான SCREEN SHOT உடன், சுப்புராமன் கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்தார். இந்நிலையில் ஆய்வு படிப்பிற்கு கையொப்பம் வாங்க வந்த மாணவர்களிடம் கிருஷ்ணன் கடுமையாக வாக்குவாதம் செய்தார். இதுதொடர்பாக மாணவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் மண்டல கல்லூரி இணை இயக்குனர் விசாரணை நடத்தினார்.

விளம்பரம்

இதனிடையே கிருஷ்ணன், கல்லூரி முதல்வர் துரையரசன் மீதும், சுப்புராமன் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் பிரச்னைக்கு உரிய பேராசிரியர்கள் கிருஷ்ணன் மற்றும் சுப்புராமன் ஆகியோரை பணியிட மாற்றம் செய்து கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

  • First Published :



Source link