திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே அமைந்துள்ள டி.இ.எல்.சி உலக ரட்சகர் தேவாலயம் கடந்த 54 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. 1969ல் துவங்கப்பட்ட இந்த தேவாலயத்தில் ஒரு பழம்பெறும் கிணறு ஒன்று இருந்தது. இந்த கிணற்றில் தண்ணீர் எப்பொழுதும் வற்றாமல் ஊறிக் கொண்டிருந்தது.

சுற்றுப்புறத்தில் வசித்த பல்வேறு மக்களும் தண்ணீர் கிடைக்காமல் வறண்ட காலங்களில் தவித்த போதும் இந்த கிணற்றில் நீர் வற்றாமல் நிறைந்து காணப்படும். இதில் இருந்து தான் சுற்றுப்புறத்தில் உள்ள 41 கிராம மக்கள் தண்ணீர் பெற்று வாழ்ந்து வந்தனர்.

மேலும் அனைத்து சமுதாய மக்களும் இந்த தேவாலயத்தில் ஒன்றாக வழிபாடு செய்தும் வந்துள்ளனர். ஜாதி மதம் என எந்த பாகுபாடும் இல்லாமல் இங்கு அனைவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.கால மாற்றத்தில் தற்போது அனைத்து பகுதிகளுக்கும் அரசு தண்ணீர் வசதி செய்து கொடுத்துள்ள நிலையில் இந்த தேவாலயத்திற்கு வந்து மக்கள் தண்ணீர் பெறும் தேவையானது குறைந்துள்ளது.

திருப்பூர்

திருப்பூர்

டி.இ.எல்.சி உலக ரட்சகர் தேவாலயம்

இருப்பினும் அனைத்து தரப்பு மக்களும் இங்கு வழிபாடு செய்வது தொடர்ந்து வருகிறது. இதனால் கால ஓட்டத்தில் இந்த கிணறு மூடப்பட்டு ஆழ்துளை கிணறாக மாற்றப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றாக பாவித்து சமத்துவத்தை அன்றே போதித்தது இந்த தேவாலயம் என்றால் அது மிகையாகாது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.



Source link