திருவாரூர் மாவட்டம் பேரளம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீபவானி அம்மன் சமோத ஸ்ரீசுயம்புநாத சுவாமி ஆலயம் தமிழகத்தின் சிறப்புவாய்ந்த சிவாலயங்களில் ஒன்றாகவும், பாடல் பெற்ற ஸ்தலமாகவும் விளங்குகிறது. இவ்வாலயத்தில் நடைபெறும் பிரதோஷத்தில் கலந்துகொண்டால் தீராத நோய் நீங்கி மன நிம்மதியுடன் வாழலாம் என்பது இவ்வாலயத்தின் ஐதீகமாக கூறப்படுகிறது.

அதன்படி நடைபெற்ற சோமவார பிரதோஷத்தையொட்டி ஆலயத்தின் மூலஸ்தானத்திற்கு எதிரே அமைந்துள்ள நந்தி பெருமானுக்கு திரவியப்பொடி, மஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் முதலான வாசனை திரவிய நறுமன பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.

பேரளம் சுயம்பு நாதர் கோயிலில் சோமவார பிரதோஷ வழிபாடு
திருவாரூர்

திருவாரூர்

இதனைத்தொடர்ந்து நந்தி பெருமானுக்கு மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு நந்தி பெருமானை வழிபட்டு செய்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.



Source link