ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றுப்பாலம் கரையில் அமைந்துள்ளது சோழீஸ்வரர் கோவில். சிவபெருமானை அழித்தல் தொழில் செய்யும் தெய்வம் என குறிப்பிடப்படுவதால் நீர்நிலைகளில் பெரும்பாலும் கோவில்கள் அமைவது சிறப்பான விஷயமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்த சோழீஸ்வரர் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று தான்.

இங்கு கடந்த ஜூலை மாதம் வெகு விமர்சையாக கும்பாபிஷேகம் நடந்து முடிந்த நிலையில் தற்போது மண்டல பூஜைகள் செய்யப்பட்டு மண்டல பூஜையின் இறுதிநாளில் பாட்டு மற்றும் பரதம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சியுடன் இந்த விழா நிறைவடைந்துள்ளது.

பிரபல திரை பாடகர்களின் இசை நிகழ்ச்சி

இதில் பிரபல திரை பாடகர்களான அருணா, அகிலா இருவரும் கலந்து கொண்டு தெய்வீகபாடல்களை பாடி அந்த இடத்தில் கூடியிருந்த மக்களை தெய்வீக நிலையில் ஆழ்த்தினர். காவிரி ஆற்றங்கரையில் வீசும் காற்றில் அன்பே சிவம் என்னும் சொல்லிற்கு சொந்தக்காரரான சோழிஸ்வரரின் ஆலயமே இசையில் மிதந்தது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.



Source link