முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கு கலைஞர் காலை உணவு திட்டம் என பெயர் சூட்ட வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நான்காம் வகுப்பு மாணவர் கடிதம் எழுதியுள்ளார்.

நகரப் பகுதிகளிலும், கிராம பகுதிகளிலும் காலையிலேயே பள்ளிக்கு செல்லக் கூடிய குழந்தைகள் அவசரத்திலும், குடும்ப சூழ்நிலை என பல்வேறு காரணங்களுக்காக காலை உணவை சரிவர சாப்பிடுவதில்லை என அரசுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது.

முதற்கட்டமாக கடந்த ஆண்டு செப்டம்பர் 15ல் தொடங்கப்பட்ட இத்திட்டமானது தற்போது தமிழகத்தின் அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 18 லட்சம் மாணவ – மாணவியர் பயனடைகின்றனர்.

இந்நிலையில் கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த சேப்ளாபட்டியை சேர்ந்த 4 ஆம் வகுப்பு படிக்கும் முரசொலி மாறன் என்ற மாணவன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தானும் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் பயன்பெறுவதாகவும் உணவு மிகவும் நன்றாக உள்ளதாகவும் அந்த மாணவர் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் பசி ஆறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : தமிழில் பெயர் பலகை வைக்காத தனியார் நிறுவனங்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம்… தமிழ்நாடு அரசு அதிரடி!

எனவே ஏழை குழந்தைகள் பசியாறும் இந்த திட்டத்திற்கு கலைஞர் காலை உணவு திட்டம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளார். அதுமட்டுமன்றி முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை கலைஞர் காலை உணவு திட்டம் என பெயர் மாற்றம் செய்து அறிவிக்க கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த சேப்ளாபட்டியில் உள்ள அரசு நடுநிலை பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் அவர் வேண்டுகோள் வைத்துள்ளார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.



Source link