நாமக்கல் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் வரும் 15ம் தேதி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளது.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, “நாமக்கல் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளையொட்டி வரும் 15ம் தேதி, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு கலைக் கல்லூரியில் பேச்சுப் போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில், நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொள்ளலாம்.

பேச்சுப்போட்டி காலை 9.30 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறும். இப்போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு, மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000 வீதம், மாவட்ட ஆட்சியரால் வழங்கப்படும்.

அண்ணாவும் மேடைப் பேச்சும், கடமை, கண்ணியம் கட்டுப்பாடு, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு, வாய்மையே வெல்லும் , ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் ஆகிய தலைப்புகளில் மாணவ மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தலாம்.

கல்லூரி மாணவ, மாணவிகள் அந்தந்த கல்லூரி முதல்வரின் அனுமதியுடன், கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் வழியாக இப்பேச்சுப் போட்டியில் பங்கேற்று பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகக் கூடுதல் கட்டிடத்திலுள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலக தொலைபேசி எண்- 04286 – 292164 மூலம் தொடர்பு கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.



Source link