ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அடுத்த முகுந்தராயன் சத்திரத்தில் அப்பகுதி மீனவர்கள் படகுகளை நிறுத்தும் வசதிக்காக கடந்த 2015ம் ஆண்டு ரூ.15 கோடி செலவில் 70 அடி அகலம் , 70 அடி நீளத்தில் T- வடிவில் பாலமானது அமைக்கப்பட்டது.

இந்த பாலமானது அமைக்கப்பட்ட சில மாதங்கள் மட்டுமே மீனவர்கள் பயன்படுத்தி வந்தனர். பின்பு காலப்போக்கில் காற்றின் வேகத்தில் அலைகள் ஆக்ரோசமாக எழுவதால் பாலமானது அதிர தொடங்கியது. இதனால் மீனவர்கள் இதனை பயன்படுத்தாமல் விட்டுவிட்டனர்.

பின்பு காலப்போக்கில், தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆக்ரோசமாக எழும் கடல் அலை முன்பு புகைப்படம் எடுத்தும் செல்லும் இடமாக மாறியது. ஆபத்தான இடம் என்பதால் எங்கு காவல்துறையினர் பணியில் அமர்த்தி சுற்றுலா பயணிகள் அனுமதி மறுக்கப்பட்டது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்

ரூ.15 கோடி செலவில் அமைக்கப்பட்ட பாலம் சேதம்

இந்நிலையில், கடந்த சில நாட்களாக வீசுவரும் சூறைக்காற்றினால் தனுஷ்கோடி சாலை முழுவதும் மணல் மூடி உள்ளது. இந்த காற்றின்னால் கடல் அலை இந்த பாலத்தில் அடித்து 30 முதல் 40 மீட்டர் தூரம் வரை எழும். இதையடுத்து தற்போது இந்த பாலமானது மண் அரிப்பால் தூண்களில் அஸ்திவாரம் கடலுக்குள் இறங்கி சேதமடைந்துள்ளது.

மேலும், வரும் நாட்களில் மழைக்காலத்தில் தனுஷ்கோடியில் பலத்த காற்று வீசினால் முழுபாலத்தின் தூண்களும் கடலுக்குள் இறங்கி பாலம் முழுவதும் சேதமடைந்து விடும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.



Source link