தேனி மாவட்டம் கூடலூரில் அமைந்துள்ள கூடல் அழகர் கோயிலில் உள்ள கோகுல கிருஷ்ணருக்கு கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கிருஷ்ணஜெயந்திக்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் நடைபெறும் இந்த விழாவில், கூடல் அழகர் கோயிலில் உள்ள கிருஷ்ணரை ஊர்வலமாக அழைத்து வந்து அபிஷேக அலங்காரங்கள்செய்வது வழக்கம்.
அந்த வகையில் கூடலூர் பகுதியில் அமைந்துள்ள யாதவர் திருமண மஹாலில் கோகுல கிருஷ்ணருக்கு வாழைப்பழம், மாதுளை பழம், பேரிச்சை பழம் உள்ளிட்ட பழ வகைகளாலும், 108 லிட்டர் பால், தயிர், சந்தனம் மஞ்சள் தேன் இளநீர் உள்ளிட்டவற்றைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கிருஷ்ணருக்கு வெண்ணை காப்பு, சந்தன காப்பு சாற்றி அபிஷேகங்களும் நடைபெற்றன.

தேனியில் கிருஷ்ணரின் நகர்ப்புற புறப்பாடு
அதனைத் தொடர்ந்து சந்தன காப்புடன் வண்ணமலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட கோகுல கிருஷ்ணருக்கு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர், மாலை வேளையில் கோகுல கிருஷ்ணரின் வீதி ஊர்வலம் புறப்பாடு நடைபெற்றது. கூடலூர் நகரின் முக்கிய வீதிகளில் இந்த ஊர்வலம் நடைபெற்றது. கிருஷ்ணரின் நகர் ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கிருஷ்ணரை தரிசனம் செய்தனர். இந்த ஊர்வலமானது கூடல் அழகர் பெருமாள் கோவிலில் நிறைவடைந்தது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.