தஞ்சாவூரில் தனக்கு தானே பிரசவம் பார்த்துக்கொண்ட பெண், 6 வதாக பிறந்த குழந்தையை கயிற்றால் கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வசந்தி (வயது 40). இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகளும் இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் வசந்தி மீண்டும் 6 வது முறையாக கர்ப்பம் தரித்துள்ளார். ஏற்கனவே 5 குழந்தைகள் உள்ள நிலையில் குடும்ப வறுமை காரணமாக 6 வது குழந்தையை வளர்த்து ஆளாக்க முடியாது என்று நினைத்துள்ளார்.
அதனால் அதிகாலை பிரசவ வலி எடுத்தவுடன் தனக்குத்தானே பிரசவம் பார்த்துவிட்டு, பிறந்த குழந்தையின் கழுத்தில் கயிற்றால் இறுக்கி கொலை செய்து வாலியில் வைத்து துணியால் மூடியுள்ளார். இதற்கிடையே வசந்திக்கு அதிக உதிர போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக மோசமடைய ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் தனக்கு மயக்கம் வருவதாக குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். குடும்பத்தினர் சென்று பார்த்தபோது குழந்தை கொலை செய்ப்பட்டு வாலியில் மூடி வைக்கப்பட்டிருந்தது. அதற்கு அருகில் வசந்தி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்து ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் வசந்தியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். எனவே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வசந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.