தூத்துக்குடி
மாநகராட்சி பள்ளியில் காலை உணவு திட்டத்தை ஆய்வு மேற்கொண்ட எஸ்.பி. பாலாஜி மாணவர்களுடன் அமர்ந்து உணவு உட்கொண்டார்.
தமிழ்நாடு முழுவது உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில் அரசின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தூத்துகுடியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
உணவு தயாரிக்கும் முறை குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்த அவர், குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவை மிகுந்த கவனத்துடன் வழங்க வேண்டும் என்றும் உணவை நீங்கள் முதலில் சாப்பிட்ட பிறகு குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார். இதனை தொடர்ந்து குழந்தைகளுடன் அமர்ந்து அவர் உணவு உட்கொண்டார். மேலும் அனைவரும் படித்து பெரிய அதிகாரிகளாக வரவேண்டும் என்றும் குழந்தைகளுக்கு ஊக்கமளித்தார்.
இதையும் படிங்க : தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு வழக்கம்போல் பேருந்துகள் இயக்கம்
இதனை தொடர்ந்து பள்ளியில் உள்ள கழிவறைகளை ஆய்வு மேற்கொண்டு அவர், எப்போதுமே சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார். மேலும் பள்ளி வகுப்பறை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு குழந்தைகள் வருகை எண்ணிக்கை குறித்தும் கேட்டறிந்தார்.
அப்போது அந்த பள்ளியில் 343 குழந்தைகள் காலை உணவு திட்டத்தில் உணவு அருந்துவதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்தனர். மேலும் பள்ளிக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் 6,7,8 ஆம் வகுப்பு மாணவர்கள் மத்தியில் நீங்கள் ஒருநாள் உரையாட வேண்டும் என பெற்றோர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மீண்டும் வருவதாக அவர் உறுதி அளித்துவிட்டு சென்றார்.
செய்தியாளர் : முரளி கணேஷ் (தூத்துக்குடி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
- First Published :