நீலகிரி மாவட்டத்தில் நிலவும் வானிலையை அனுபவித்து மகிழ சுற்றுலா பயணிகள் குவிந்தவண்ணமே உள்ளனர். இங்கு மழை,வெயில்,பனி என கால நிலை மாரி மாரி இருக்கும். அந்த வகையில் உதகையில் கடந்த 2 நாட்களாக காலை நேரங்களில் பனி மூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
உதகை நகரை சுற்றி உள்ள தொட்டபெட்டா,எல்க்ஹில்,ஹில் பங், உள்ளிட்ட பகுதிகள் காலை நேரத்தில் வெள்ளை போர்வை போர்த்தியது போல பனி சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் வாகனங்கள் மீது நீர்பனி சூழ்ந்து காணப்படுகிறது. உறைய வைக்கும் பனி மெல்ல கலைந்து சென்று பகல் நேரங்களில் மழை வெயில் என வானிலை மாற்றத்துடனே காட்சியளித்து வருகிறது.

ஊட்டி
இது போன்ற வானிலை நிலவும் சமயங்களில் அருகே வரும் வாகனங்கள் கூட தெளிவாக தெரிவதில்லை. அந்த சமையத்தில் அதிக அளவு விபத்துக்களும் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வாகனங்களில் மின் விளக்கை ஒளிரவிட்டபடி செல்வதும் மிக முக்கியம். அதிக அளவு வளைவுகளை கொண்ட பாதைகள் என்பதால் தேவையான பாதுகாப்பு கவசங்கலுடன் வாகனங்களை இயக்குவதும் முக்கியமான ஒன்றாகும். வழக்கமாக நவம்பர் டிசம்பர் மாதங்களில் துவங்கும் நீர் பனி தற்போது முன்கூட்டியே அவ்வப்போது பொழிந்து வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.