சிவகாசி மேம்பால பிரச்சனையை கேலி செய்யும் வகையில் சர்ச்சைக்குரிய விளம்பர பேனர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
சிவகாசியில் இருந்து விருதுநகர் செல்லும் பாதையில் அமைந்துள்ள திருத்தங்கல் இரயில்வே கேட்டால் நாளுக்கு நாள் சிவகாசியின் போக்குவரத்து பிரச்சினை அதிகரித்து வரும் நிலையில், திருத்தங்கல் இரயில்வே மேம்பால திட்டம் என்ன நிலையில் உள்ளது என்று தெரியாமலே உள்ளது. மேம்பாலம் இன்று வரும் நாளை வரும் என்று காத்திருந்த மக்களுக்கு இன்று வரை ஏமாற்றமே மிஞ்சியபடி உள்ளது.
இந்த நிலையில் இந்த மேம்பால விவகாரத்தை கேலி செய்யும் விதமாக திருத்தங்கல் இரயில்வே கேட் அருகில், சர்ச்சைக்குரிய வகையில் விளம்பர பேனர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. சிவகாசியை சேர்ந்த பிரபல கார்டியாக் சென்டர் சார்பாக வைக்கப்பட்டுள்ள அந்த விளம்பர பேனரில் இரயில்வே மேம்பாலம் வருமா வராதா என்று கனத்த இதயத்தோடு காத்திருக்கும் மக்களின் இதயத்திற்கு மருந்தாய் நாங்கள் இருக்கிறோம் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
பொதுப்பிரச்சனையோடு வியாபார யுக்தி கலந்து வைக்கப்பட்டுள்ள இந்த பேனர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.