தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சுருளி அருவி அமைந்துள்ளது. அருவியில் குளிப்பதற்காக நாள்தோறும் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த சுருளி அருவி வனப்பகுதிகளில் யானை, காட்டெருமை, மான், கரடி போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பது வழக்கம்.

இந்நிலையில் சுருளி அருவிக்கு செல்லும் வனச்சாலையில் காட்டு யானைகள் கூட்டம் முகாம் இட்டுள்ளதால் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் சென்று குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

அதிகாலை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சுருளி அருவியில் குளிப்பதற்கு ஆர்வத்துடன் வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் யானைக் கூட்டங்கள் அப்பகுதியை விட்டு கடந்த பின்பு தான் அருவியில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கம்பம் கிழக்கு வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.



Source link