நாளை புரட்டாசி மாதம் தொடங்கவதால், மீன் சந்தைகளில் மீன் பிரியர்கள் கூட்டம் அலைமோதியது.

நாளை புரட்டாசி தொடங்குவதால், பெருமாளை வழிபடுவோர் இம்மாதம் முழுவதும் அசைவத்தை தவிர்த்து விரதத்தை கடைபிடிப்பது வழக்கம். இன்னும் ஒரு மாதத்திற்கு அசைவம் சாப்பிட முடியாது என்பதாலும் ஞாயிறு விடுமுறை என்பதாலும் இறைச்சி மற்றும் மீன்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டினர். 

கடலூர் துறைமுகத்தில் மீன்களை வாங்க பொதுமக்கள் குவிந்தனர். வஞ்சாம், சங்கரா, கொடுவா, இறால் என வகைவகையான மீன்களை போட்டி போட்டுக் கொண்டு மக்கள் வாங்கிச் சென்றனர். ஒரு கிலோ வஞ்சரம் ரூ.700, சங்கரா ரூ.300, கொடுவா ரூ.350க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

காத்து வாங்கிய காசிமேடு சந்தை

விடுமுறை தினத்தன்று சென்னை காசிமேடு மீன் சந்தையில் கூட்டம் அதிகரித்து காணப்படும். ஆனால், வழக்கத்திற்கு மாறாக மீன்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால், சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் சற்று காற்று வாங்கியது. மீன்கள் விற்பனை மந்தமானதால் வியாபாரிகள் கலக்கம் அடைந்தனர். கூட்டம் இல்லை என்றாலும் விலையேற்றமின்றி மீன்கள் விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.



Source link