திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே புது மார்க்கெட் வீதி, மங்கலம் சாலை, பூங்கா சாலை, பெருமாள் கோவில் வீதி என நான்கு சாலை சந்திப்பு உள்ளது. இந்த பகுதி மாநகராட்சியின் முக்கிய பகுதி என்பதால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். இதனால் போக்குவரத்தை கண்காணிக்க புறக்காவல் நிலையம் அமைத்து போலீசார் பணியாற்றி வந்தனர்.
இந்த பகுதியில் சுற்றித்திரிந்த குட்டி நாய் ஒன்று புறக்காவல் நிலையத்தில் தஞ்சமடைந்து. அதற்கு அடைக்கலம் கொடுத்த போலீசார் தினந்தோறும் உணவு வழங்கி வந்தனர். தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நாய் அங்கேயே வளர்ந்தது. காவலர்கள் வந்தாலே நான் அவர்களுடனேயே சுற்றி திரியும்.
இந்நிலையில் அந்தப் பகுதியில் சென்ற வாகனம் ஒன்று நாய் மீது மோதியதில் நாய் பரிதாபமாக உயிரிழந்தது. இதனை அறிந்த போலீசார் வேதனை அடைந்தனர். தொடர்ந்து தங்களுடன் நான்கு ஆண்டுகளாக பயணித்த நாய்க்கு இறுதி மரியாதை செய்ய தீர்மானித்தனர். அதன்படி புற காவல் நிலையம் அருகிலேயே குழி தோண்டி நாய் உடலுக்கு இறுதி மரியாதை செய்து அடக்கம் செய்தனர். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.