கடலூர் மாவட்டம் முழுவதும் வேகமாக காய்ச்சல் பரவி வருகிறது. இதனால், பொதுமக்கள் மருத்துவமனைகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கடலூரில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் காலை முதல் ஏராளமான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருத்தனர். காய்ச்சலுடன் மூட்டு வலியும் இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த காய்ச்சலால் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால், வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் குழந்தைகளுடன் வந்து மருத்துவமனையில் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர்.
பருவநிலை மாற்றம் காரணமாக காய்ச்சல் பரவி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் தொடர்ந்தால் ரத்தப் பரிசோதனை செய்யவும் அறிவுறுத்தியுள்ளனர்.கடலூரில் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 15 பேர், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனை வளாகத்தில் ஏராளமானோர் இன்று சிகிச்சைக்காக குழந்தைகளுடன் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.இதுதொடர்பாக, நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி வெளியிட்டது.இதன் எதிரொலியாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், அரசு தலைமை மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, டெங்கு காய்ச்சலால் சிகிச்சை பெற்று வரும் நபர்களை சந்தித்து, நலம் விசாரித்தார்.அத்துடன், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.காய்ச்சல் காரணமாக அச்சப்பட வேண்டாம் என்றும், அலட்சியப்படுத்தாமல் உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ளவும் அற்வுறுத்தினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.