ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.

நாடு முழுவதும் விநாயகர் பிறந்தநாளாக விநாயகர் சதுர்த்தியானது ஆவணி வளர்பிறை நாளில் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் விநாயகர் சிலைகள் வைத்தும், விநாயகர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தி விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் காவல் நிலையம் எதிரே உள்ள தம்பியான்கொல்லை பழமைவாய்ந்த தனுஷ்கோடி விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பெண்கள் பால்குடம் எடுத்து விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்தனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்

தனுஷ்கோடி விநாயகர் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை

இதன் பின்பு தேன், சந்தனம், மஞ்சள், இளநீர், தயிர் போன்ற பதினொரு வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது விநாயகருக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ராமேஸ்வரத்தினைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு விநாயகரை வணங்கி சென்றனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.



Source link