நீலகிரி மாவட்ட சீகூர் வன பகுதியில் 3 புலி குட்டிகள் உயிரிழந்தது. ஒரு பெண் புலிக் குட்டி உயிரிருடன் மீட்கபட்ட நிலையில் அவற்றுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே இறந்த குட்டிகளின் தாய் புலியை தேடும் பணியில் நான்கு வனத்துறை தனிப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள சின்ன குன்னூர் பகுதியில் நேற்று முன்தினம் ஒரு ஆண் புலிக் குட்டி உயிரிழந்தது கண்டு பிடிக்கபட்டது. அதனை மீட்ட உதகை தெற்கு வனச்சரகத்தினர் பிரேத பரிசோதனை செய்ததுடன் தாய் புலியை தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலை சின்ன குன்னூர் வன பகுதியை ஒட்டி உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளி மண்டல பகுதிக்கு உட்பட்ட சீகூர் வனச்சரக எல்லையில் மேலும் இரண்டு புலிக் குட்டிகள் உயிரிழந்து இருப்பதை பார்த்தனர். அவற்றின் உடல்களை மீட்கபட்ட போது மேலும் ஒரு பெண் புலிக் குட்டி உயிரிருடன் இருப்பதை கண்டனர். அதனை பத்திரமாக மீட்ட வனத்துறையினர் முதுமலை கால்நடை மருத்துவர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இறந்த 3 குட்டிகளும் பிறந்து 2 மாதங்களே ஆன பெண் குட்டிகள் என்பது தெரியவந்துள்ளது. இறந்த புலிகுட்டிகளின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யபட்டுள்ள நிலையில் தாய் புலி உயிருடன் உள்ளதா? அல்லது இறந்துள்ளதா? என்பதை உறுதி செய்ய 50-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் 4 குழுக்களாக பிரிந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு மாதத்தில் 5 புலிக் குட்டிகள் உள்பட 9 புலிகள் உயிரிழந்துள்ளது குறித்து தமிழக அரசு உயர் மட்ட குழு விசாரணை நடத்த வேண்டும் என சுற்று சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை..
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.