கடலூரில் முன்பகை காரணமாக 12 ஆம் வகுப்பு மாணவன் குத்தி படுகொலை செய்யபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்திற்குட்பட்ட மேல் புளியங்குடி கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் ஜீவா, விருதாச்சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்த சுப்ரமணி மகன் ஆனந்த் என்பவர் ஒப்பந்த அடிப்படையில் மின்வாரியத்தில் வேலை செய்து வருகிறார்.

இன்று காலை 8 மணிக்கு ஜீவா பள்ளிக்கு செல்ல பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது அங்கு சென்ற ஆனந்த், தனியாக பேச வேண்டும் என்று கூறி மாணவனை ஓடை பக்கம் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த ஆனந்த், ஜீவாவை கத்தியால் சரமாரியாக குத்திவீட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

விளம்பரம்

இதையும் படிங்க : விவசாயியை எட்டி உதைத்த விவகாரம்… ஊராட்சி செயலரை கைது செய்ய 5 தனிப்படை

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்படிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தலைமறைவாக உள்ள ஆனந்தை தேடி வருகின்றனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…



Source link