காஞ்சிபுரம்
மாவட்டம் குன்றத்தூரில் மதுப்பிரியர்களை கவர சிக்கன் பிரியாணியுடன் கள்ள சந்தையில் பாரில் மது விற்பனை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குன்றத்தூர் அருகே கொல்லச்சேரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் ஏரிக்கரை சாலையில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. பாருடன் கூடிய இந்த டாஸ்மாக் கடையில் அரசு நிர்ணயித்த நேரத்தை தவிர்த்து காலை மற்றும் இரவு நேரங்களிலும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கள்ளச்சந்தையில் படுஜோராக மது விற்பனை நடைபெறுவது மட்டுமின்றி மது பிரியர்களை ஈர்ப்பதற்காக காலையிலேயே அவர்களுக்கு இட்லி, சாம்பார் போன்ற உணவு வகைகள் சைடிஷ்-ஆக இலவசமாக வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இன்னும் ஒரு படி மேலே சென்று ஞாயிற்றுக்கிழமைகளில், காலையிலேயே மது அருந்த வருபவர்களுக்கு சிக்கன் பிரியாணியுடன் மது விற்பனை நடைபெற்று வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால் இந்த பாருக்கு வரும் மது பிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் தற்போது மதுக்கடையை திறப்பதற்கு முன்பே பாரில் ஏராளமான மதுப்பிரியர்கள் அமர்ந்து மது குடிக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமைகளில் சிக்கன் பிரியாணியுடன், கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதும், இதை தாம்பரம் மதுவிலக்கு கண்டுக்கொள்ளாமல் இருப்பதும் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாருக்கு மது குடிக்க வருபவர்கள் ஏரிக்கரை சாலையிலேயே மதுபோதையில் படுத்துக்கிடப்பதால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…