ராமநாதபுரம்
மாவட்டம் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதால் அவ்வப்போது கடலானது உள்வாங்கி காணப்படுகிறது. காற்று அதிகமாக வீசும் இடங்களில் கடல் சீற்றமாகவும், மிதமான காற்று வீசும் இடங்களில் கடல் உள்வாங்கியும் காணப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்துள்ள ஓலைக்குடா கிராமம் பாக்ஜலசந்தி கடல் பகுதியானது 200 மீட்டர் தொலைவு வரையிலும் உள்வாங்கி உள்ளது. பொதுவாக காலை பொழுதில் கடல் உள்வாங்கி காணப்பட்டால் மதியத்திற்கு மேல் இயல்பு நிலைக்கு வந்துவிடும். ஆனால் இப்பகுதியில் காலை முதல் மாலை வரை ஒரே நிலையில் தான் உள்ளது.

விளம்பரம்
உள்வாங்கிய கடல்

இதனால் அப்பகுதியில் மணல் திட்டுகள் உருவாகி காணப்படுகின்றன. லட்சக்கணக்கில் சங்கு நத்தைகள், சிற்பிகள் பாறைகளில் இறந்தும் உயிருடனும் அப்பகுதியில் பரவிக் காணப்படுகின்றன. கடந்த சில நாட்களாக இயல்புநிலையை விட கடல் உள்வாங்கி காணப்படுவதால் அப்பகுதி மீனவர்கள் தங்களது நாட்டுப்படகுகளை ஆழமான இடங்களில் நிறுத்தி உள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…



Source link