மயிலாடுதுறை
மாவட்டத்தின் முக்கிய இடங்களில் நாளை மின்தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மின் நிலையங்களில் மாதத்திற்கு ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி திருநகரி, மங்கைமடம் துணை மின் நிலையத்தில்  நாளை (அக்டோபர் 12ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

விளம்பரம்
திருக்குறளை எப்படி கேட்டாலும் சொல்வேன்… கோவை சிறுவனின் அசாத்திய திறமை.!


திருக்குறளை எப்படி கேட்டாலும் சொல்வேன்… கோவை சிறுவனின் அசாத்திய திறமை.!

மேலும் மயிலாடுதுறை மாவட்ட திருநகரி, மங்கை மடம் பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து கொள்ளும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க

மின்தடை ஏற்படும் இடங்கள்

திருநகரி, மங்கைமடம், திருக்குரவளூர், நெப்பத்தூர். முள்ளி பள்ளம், கதிராமங்கலம், சேத்தூர், பெருமங்கலம், திருப்பன்கூர், கன்னியாகுமரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5.00 மணி வரையும் மின்சாரம் நிறுத்தப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…



Source link